வியாழன், 17 செப்டம்பர், 2009

"இந்நிலையும் மாறிவிடும்" - ஸென் கதை

தியான வகுப்பு ஒன்றில் புதிதாய் சேர்ந்த மாணவன் ஒருவன் தனது குருவிடம் சென்று

"என்னுடைய தியானம் மிகக்கடுமையாயிருக்கிறது. இதனால் என் மனநிலையே மாறிப்போகிறது. கால்கள் மிகவும் வலியெடுக்கின்றன. மேலும் தொடர்ந்து நான் தூக்கத்தையே உணர்கிறேன். என்னால் தாங்க முடியவில்லை. பயங்கரமாக இருக்கிறது, முன்னெப்போதும் இப்படி உணர்ந்ததில்லை" என்றான்.

குரு நிதானமாகச் சொன்னார் "இந்நிலையும் மாறிவிடும்"

ஒரு வாரம் கழித்து, அதே மாணவன் மீண்டும் ஆசிரியரிடம் சென்று சொன்னான்

"என்னுடைய தியானம் மிகவும் அருமையாயிருக்கிறது. இதனால் நான் அமைதியாகவும், மிகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன். என்னையே நான் உணர்கிறேன்" என்றான்

குரு நிதானமாகச் சொன்னார் "இந்நிலையும் மாறிவிடும்"

-------------------------------------------------------
நெட்டில் உலாவும் போது கிடைத்த ஆங்கில ஸென் கதையை மொழிபெயர்த்து அனுப்பியிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக